அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526, இராமநாதபுரம் .
Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram - 623526, Ramanathapuram District [TM035671]
×
Temple History
தல வரலாறு
வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருத்தலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை ஒரு துறவியின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதன் பின் கி.பி. பன்னிரண்டாம் நுற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரமபாகு என்பவர் இத்திருக்கோயில் கர்ப்பக்கிரகத்தைக் கட்டியும், பதினைந்தாம் நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் மேற்கு கோபுரத்தையும், மதில் சுவர்களையும் கட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் திருப்பணிகளைச் செய்துள்ளார்.
பதினாறாம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கனின் கீழ் குறுநில மன்னராக இருந்த சின்னஉடையான் சேதுபதி கட்டத்தேவர் என்பவர் நந்தி மண்டபத்தையும் மற்றும் சில திருப்பணிகளையும் செய்துள்ளார். சிறப்பு மிக்க இத்திருக்கோயிலில்...வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருத்தலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை ஒரு துறவியின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதன் பின் கி.பி. பன்னிரண்டாம் நுற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரமபாகு என்பவர் இத்திருக்கோயில் கர்ப்பக்கிரகத்தைக் கட்டியும், பதினைந்தாம் நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் மேற்கு கோபுரத்தையும், மதில் சுவர்களையும் கட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் திருப்பணிகளைச் செய்துள்ளார்.
பதினாறாம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கனின் கீழ் குறுநில மன்னராக இருந்த சின்னஉடையான் சேதுபதி கட்டத்தேவர் என்பவர் நந்தி மண்டபத்தையும் மற்றும் சில திருப்பணிகளையும் செய்துள்ளார். சிறப்பு மிக்க இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் நந்தியின் உயரம் 17 அடி, நீளம் 22 அடி, அகலம் 12 அடியாகும். பின்னர் சேதுபதி மன்னர்களும், நாட்டுகோட்டை நகரத்தார்களும் போக்குவரத்து இல்லாத அக்காலத்திலேயே பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
17 ஆம் நுற்றாண்டில் தளவாய் சேதுபதி என்பவரால் இத்திருக்கோயில் கிழக்கு இராஜகோபுரத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1897-1904 ஆண்டுகளில் நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பத்தாரைச் சேர்ந்த தேவகோட்டை ஜமீன்தார் ஏஎல். ஏஆர். குடும்பத்தினரால் திருப்பணி நிதி வசூலித்து 126 அடி உயரமுள்ள ஒன்பது நிலை கிழக்கு இராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
தல பெருமை
ஸ்ரீஇராமபிரான் இராவணனைக் கொன்றதால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்குச் சீதை, இலட்சுமணனுடன் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தை நல்ல நேரம் முடிவதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
கைலாசத்திலிருந்து திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்யப்பெற்ற சிவலிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை ஆறுதல் செய்வதற்காக இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கத்தை பிரதிஷ்டை...ஸ்ரீஇராமபிரான் இராவணனைக் கொன்றதால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்குச் சீதை, இலட்சுமணனுடன் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தை நல்ல நேரம் முடிவதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
கைலாசத்திலிருந்து திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்யப்பெற்ற சிவலிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை ஆறுதல் செய்வதற்காக இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, இனி அதற்கே பூசை முதலியன முதலில் செய்ய வேண்டுமென்று இராமபிரான் ஆணையிட்டார். இத்திருக்கோயிலில் இந்த விசுவநாதருக்கே தினந்தோறும் முதல் பூசை நடைபெறுகிறது. இராமபிரான் ஈஸ்வரனை வழிபட்டதால் இத்தலம் இராமேசுவரம் எனப் பெயர்பெற்றது.
இலக்கிய பின்புலம்
கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்,
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு
தேடி மால் செய்த கோயில் திரு இராமேசுவரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகும் அன்றே
என அப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) பதிகம் பாடி வணங்கி போற்றும் இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருஞானசம்பந்தராலும் பாடல் பெற்றதாகும். மேலும், அருணகிரிநாதர், தாயுமானவர், முத்துச்சாமி தீட்சிதர் எனப் பல அருளாளர்கள் போற்றி பாடியுள்ளனர்.
இந்தியத் திருநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் இராமேசுவரம் பழமையும், பெருமையும் வாய்ந்த திருத்தலமாகும். மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய முப்பெருமைகளையும் கொண்ட புண்ணியத் தலமாகும். இராமேசுவரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. இந்தியத் திருநாட்டில் உள்ள புண்ணியத் திருத்தலங்கள்...கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்,
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு
தேடி மால் செய்த கோயில் திரு இராமேசுவரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகும் அன்றே
என அப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) பதிகம் பாடி வணங்கி போற்றும் இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருஞானசம்பந்தராலும் பாடல் பெற்றதாகும். மேலும், அருணகிரிநாதர், தாயுமானவர், முத்துச்சாமி தீட்சிதர் எனப் பல அருளாளர்கள் போற்றி பாடியுள்ளனர்.
இந்தியத் திருநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் இராமேசுவரம் பழமையும், பெருமையும் வாய்ந்த திருத்தலமாகும். மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய முப்பெருமைகளையும் கொண்ட புண்ணியத் தலமாகும். இராமேசுவரம் இந்திய ஒருமைப்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. இந்தியத் திருநாட்டில் உள்ள புண்ணியத் திருத்தலங்கள் நான்கில் வடக்கே மூன்றும் (துவாரகா, பூரி மற்றும் பத்ரிநாத்) தெற்கே ஒன்றுமாக (இராமேசுவரம்) அமைந்துள்ளதோடு இராமேசுவரம் மட்டுமே சிவத்தலமாக அமையப் பெற்றுள்ளது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும், தெற்கே இராமேசுவரம் மட்டும் அமைந்துள்ளது.
இராமேசுவரம் சைவர்களுக்கு மட்டுமின்றி வைணவர்களுக்கும் ஒரு சிறந்த யாத்திரை தலமாகும். இந்துக்களின் முக்கிய சமய கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் காசி யாத்திரை காசியில் துவங்கி இராமேசுவரத்தில் இராமநாதசுவாமியைத் தரிசித்த பிறகு தான் நிறைவு பெறுகிறது. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதை இந்துக்கள் தங்கள் வாழ்வின் கடமையாகக் கருதுகின்றனர்.